Wednesday, July 18, 2012

About you

***Washington universityயில் psychology departmentட்டைச் சேர்ந்த‌ simine vazire மற்றும் Erika N. Carlson ஆகிய இருவரும் ஒரு விஷயத்தை சொல்கிறார்கள். அது இது:உங்களைப் பற்றி நீங்கள் நன்றாய் தெரியும் என்று நம்புகின்றீர்கள். ஆனால் உண்மையில் உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத விஷயங்கள் மற்றவர்களுக்கு நன்றாய் தெரியும். அதாவது உங்களின் தவறுகளை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. அது மற்றவர்களால் முடியும். அதே போல் மற்றவர்களின் தவறுகளை அவர்களாலேயே கண்டு பிடிக்க முடியாது. அது உங்களால் முடியும்.

ஏன் இப்படி ஆகின்றது என்பதைப் பற்றி அவ்விருவரும் சொல்லியிருக்கலாம். அதை குறித்து எனக்கு தெரியாது. ஆனால் அவர்கள் சொல்லும் இந்த உண்மையை இதை படிக்கும் முன்பே நான் உணர்ந்திருக்கிறேன்.

Only 2 reasons:

1. உங்கள் மனதிற்கு இயல்பிலேயே தன்னைப் பற்றிய உண்மையை அறிந்து கொள்ள விருப்பம் இல்லை. தன்னைத் தானே நல்லவனாய் நம்பிக் கொள்ளவே உங்கள் மனம் விரும்பும். அதனால்தான் அடுத்தவன் எப்படிப்பட்டவன் என்று நோண்டி நோண்டி மோப்பம் பிடிக்கும் நீங்கள் நீங்கள் எப்படிப்பட்டவர் என்று ஒரு நாளும் யோசித்து உங்களை நீங்களே கேள்விகள் கேட்டுக் கொள்வதில்லை.

2. உங்களின் தவறுகளை கண்டுபிடிக்க நீங்கள் விரும்பினாலும் கூட அது மிகவும் கஷ்டம். காரணம் உங்களை நீங்களே விலகி நின்று உங்களையே உங்களால் காண முடியாது. ஆனால் அடுத்தவனை உங்களால் அவனிடமிருந்து விலகி இருந்து அவனை காண முடியும்.

No comments: